Search This Blog

Thursday, October 20, 2011

என் கண்ணீர் பிடிக்கும் கோப்பை

நீ சஞ்சரிக்கும் வெளிகளின் தூரம் அறியாமல்

என் ஒரு கரம் இறங்கிக் காற்றில் அசைகின்றது,

எதிர் கொள்ள ஏதுமற்று.

நிசப்தத்தின் அலறலில் மருண்டு,

திரும்பும் என் முதுகை இலக்காக்கி..

பறக்க விடுகிறாய் உன் ஈரமற்ற முத்தங்களை.

பசையற்று விழும் அவற்றைப் பொறுக்கி சேகரிக்கின்றேன்

கண்ணீர் பிடிக்கவென வைத்திருக்கும் ஓர் கோப்பையில்...

இரண்டும் கலந்து எனக்கான பானம் செய்கிறேன்

புளித்து நொதிக்கும் அதன் சுவையில்

கிறங்கி மயங்குகின்றன கண்கள்..

சில்லிட்டு விறைக்கும் தேகத்தின் வழியாக

பூமிக்குள் வேர் இறங்குகின்றது.

..ஷஹி..

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails